எங்கோ பாடப்புத்தகத்தில்
படித்த ஞாபகம்
நட்பென்றால் என்னவென்று!
நட்பு
கைமாறு கருதா கருமம் தரும்...
காலம் கடந்து நிற்கும்...
உன் குறுக்கீடு
என் வழியில் இல்லையேல்
விளக்கம் விளங்காமலே போயிருக்கும்...
ஈருடலில் ஓர் எண்ணம் - இது
நகைப்பிற்காயல்ல - என் நட்பிற்காய்...
உறவுகளுக்கும்
உனக்கும் உண்டான
மாற்றமும் புரிந்தது
மகிழ்ச்சியும் நிலைத்தது...
"அதிர்ஷ்டம்" எதை பற்றியோ
படித்தபோது நானும் நம்பவில்லை...
உன்னால்தான் அர்த்தம் பெற்றது
எந்தன் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை...
எந்தன் கைகளில் அதிர்ஷ்டம் உண்டா
எனக்கு தெரியவில்லை
எந்தன் நட்பில் முழுதும் நீதான்
எந்தன் அதிர்ஷ்டமாய்....
"சந்தோசத்திலும் கண்ணீர் வரும்" என
சொல்ல கேட்டதுண்டு...
எனக்கும் நிகழ்ந்தது
உந்தன் பதிலால் மட்டும்தான்...
உந்தன் சொற்கள்
எந்தன் கண்ணீருக்கு காரணமாய்...
தவறேயில்லை
கண்ணீரும் ஆனந்தமானது
உன்னால்தானடா...
Sunday, August 2, 2009
Friday, July 17, 2009
தேவைதான் கண்காட்சியகங்கள்
நாயா உடும்பா, பே பே, கிட்டிப்பில்
ஏதோ விளங்கா வார்த்தைகளாய்
விடலைகளுக்கு...
இனி இவைகளுக்கும் தேவை
கண்காட்சியகங்கள்!!!
ஏதோ விளங்கா வார்த்தைகளாய்
விடலைகளுக்கு...
இனி இவைகளுக்கும் தேவை
கண்காட்சியகங்கள்!!!
Monday, July 13, 2009
ஏன் இப்படியாகிப்போனோம்
ஏன் இப்படி ஏற்ற இறக்கங்கள்
எந்தன் மக்களிடையே...
சகோதரர்கள் அங்கே காரண காரியம்
ஏதுமின்றி
சிறைப்படுகின்றனர்...
சகோதரிகள் பிறந்த பாவமா
கற்பழிக்கப்படுகின்றனர்...
இங்கே நாம் ராமணா ராவணனா
கண்ணகியா சீதையா
பட்டிமண்டபங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்...
ஏன் நம் இரத்தங்களின் கஷ்டங்கள்
நமக்கே விளங்காமல் போனது...
விளங்கவில்லையா - இல்லை
வீணே போகவிட்டோமா...
அவர்களின் சயனைடுகளுக்கு
நமது அதர பானங்களா....
உண்மையில் அவர்கள் கவரிமான்கள் - நாம்
வெறும் கவரிகள்தான்....
இரங்கல் தீர்மானமென்று
ஏற்ற இறக்கத்துடன் கவியும் காவியமும் தீட்டும்
நம்மோர்
ஏன் அவர்களின் வாழ்வியலுக்கு
வழி காணவிளையவில்லை...
உண்மையில் தமிழர்கள்தானா நாம் - என்னையும்
சேர்த்துதான் நொந்துகொள்கிறேன்...
நான் என் கையாலாகா தனத்திற்காய்
உங்களிடம் மண்டியிடுகிறேன்
என்னை மன்னிதுவிடுங்களடா
எந்தன் செல்வங்களே...
ஏன் இப்படியாகிப்போனோம்......
எந்தன் மக்களிடையே...
சகோதரர்கள் அங்கே காரண காரியம்
ஏதுமின்றி
சிறைப்படுகின்றனர்...
சகோதரிகள் பிறந்த பாவமா
கற்பழிக்கப்படுகின்றனர்...
இங்கே நாம் ராமணா ராவணனா
கண்ணகியா சீதையா
பட்டிமண்டபங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்...
ஏன் நம் இரத்தங்களின் கஷ்டங்கள்
நமக்கே விளங்காமல் போனது...
விளங்கவில்லையா - இல்லை
வீணே போகவிட்டோமா...
அவர்களின் சயனைடுகளுக்கு
நமது அதர பானங்களா....
உண்மையில் அவர்கள் கவரிமான்கள் - நாம்
வெறும் கவரிகள்தான்....
இரங்கல் தீர்மானமென்று
ஏற்ற இறக்கத்துடன் கவியும் காவியமும் தீட்டும்
நம்மோர்
ஏன் அவர்களின் வாழ்வியலுக்கு
வழி காணவிளையவில்லை...
உண்மையில் தமிழர்கள்தானா நாம் - என்னையும்
சேர்த்துதான் நொந்துகொள்கிறேன்...
நான் என் கையாலாகா தனத்திற்காய்
உங்களிடம் மண்டியிடுகிறேன்
என்னை மன்னிதுவிடுங்களடா
எந்தன் செல்வங்களே...
ஏன் இப்படியாகிப்போனோம்......
Friday, July 10, 2009
கனவை கலைத்ததேன்
எந்தன் கனவுகளை
கலைத்துவிட்டுச் செல்வதில்
அப்படியென்ன சந்தோசம் உனக்கு...
கனவோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
வந்தவள்
பேசியிருக்க வேண்டும் - இல்லை
பேச தைரியப்படுதியிருக்க வேண்டும்...
எந்தன் எழுத்துக்களின்
ஆதியும் அந்தமும் நீதான் - இது
உனக்கும் தெரிந்திருக்க வேண்டும்
ஆகையால்தானோ - என்னை
எழுத வைத்தே பார்த்துக்கொள்கிறாய்...
ஏனடி அப்படியொரு பார்வை பார்த்துப்போகிறாய்
நீ பார்ப்பதேனோ உந்தன் விருப்பம்
சிதறிப் போவது நானல்லவா...
பார்வையினால் பாறைகளையும்
கரைத்துப் பார்க்கிறாயடி...
என்னை வெட்கம் கொள்ளச் செய்யும்
உந்தன் பார்வை...
உன்னை நானும்
என்னை நீயும்
இடம் மாற்றிக் கொண்டதாலோ என்னவோ - நீ
வார்த்தைகளை மட்டும் உதிர்ப்பதே இல்லை...
கடவுளின் வரத்திற்காய் ஏங்கும்
யாசகனாய்
உந்தன் வார்த்தைகளுக்காய்...
ஈர்ப்பு சக்தியென்று படித்ததுண்டு - நேரில்
கண்டுகொண்டேன் உன் பார்வையினால்...
காதல் சுகமானது - எவனோ
சொல்லிவிட்டுச் சென்றது...
உந்தன் ஒற்றைச் சொல்லிற்காய்
ஏங்கும் எனக்குத்தான் தெரியும்
காதல் நரக வேதனையடி...
கலைத்துவிட்டுச் செல்வதில்
அப்படியென்ன சந்தோசம் உனக்கு...
கனவோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
வந்தவள்
பேசியிருக்க வேண்டும் - இல்லை
பேச தைரியப்படுதியிருக்க வேண்டும்...
எந்தன் எழுத்துக்களின்
ஆதியும் அந்தமும் நீதான் - இது
உனக்கும் தெரிந்திருக்க வேண்டும்
ஆகையால்தானோ - என்னை
எழுத வைத்தே பார்த்துக்கொள்கிறாய்...
ஏனடி அப்படியொரு பார்வை பார்த்துப்போகிறாய்
நீ பார்ப்பதேனோ உந்தன் விருப்பம்
சிதறிப் போவது நானல்லவா...
பார்வையினால் பாறைகளையும்
கரைத்துப் பார்க்கிறாயடி...
என்னை வெட்கம் கொள்ளச் செய்யும்
உந்தன் பார்வை...
உன்னை நானும்
என்னை நீயும்
இடம் மாற்றிக் கொண்டதாலோ என்னவோ - நீ
வார்த்தைகளை மட்டும் உதிர்ப்பதே இல்லை...
கடவுளின் வரத்திற்காய் ஏங்கும்
யாசகனாய்
உந்தன் வார்த்தைகளுக்காய்...
ஈர்ப்பு சக்தியென்று படித்ததுண்டு - நேரில்
கண்டுகொண்டேன் உன் பார்வையினால்...
காதல் சுகமானது - எவனோ
சொல்லிவிட்டுச் சென்றது...
உந்தன் ஒற்றைச் சொல்லிற்காய்
ஏங்கும் எனக்குத்தான் தெரியும்
காதல் நரக வேதனையடி...
Sunday, February 8, 2009
என் மௌனங்களில்....
உன்னிடம்
பேசிய வார்த்தைகளை விட
பேச நினைத்த வார்த்தைகளே அதிகமடி!!!
பூவே
பூவினை பறிப்பதை
கண்டேன் உன் தோட்டத்தில்...
எந்தன்
எழுத்துப் பரிமாற்றங்களைக் கண்டு
சிலர் கேட்டனர் நீ கவிஞனா?
சிலரின் கேள்வி கதாசிரியனா?
சிலரோ பரவாயில்லை - மிகச்
சிலர் தேரிவிட்டயே!
காரணமான நீ மட்டும்
கருத்தையும் கூறவில்லை
காதலையும் தரவில்லை...
உயிருக்கும் உடலுக்குமான
தொடர்பை கண்டுகொண்டேன்
உன்னுடன் ஏற்பட்ட
காதலுக்குப் பிறகு...
பேசிய வார்த்தைகளை விட
பேச நினைத்த வார்த்தைகளே அதிகமடி!!!
பூவே
பூவினை பறிப்பதை
கண்டேன் உன் தோட்டத்தில்...
எந்தன்
எழுத்துப் பரிமாற்றங்களைக் கண்டு
சிலர் கேட்டனர் நீ கவிஞனா?
சிலரின் கேள்வி கதாசிரியனா?
சிலரோ பரவாயில்லை - மிகச்
சிலர் தேரிவிட்டயே!
காரணமான நீ மட்டும்
கருத்தையும் கூறவில்லை
காதலையும் தரவில்லை...
உயிருக்கும் உடலுக்குமான
தொடர்பை கண்டுகொண்டேன்
உன்னுடன் ஏற்பட்ட
காதலுக்குப் பிறகு...
Subscribe to:
Posts (Atom)
