Sunday, June 10, 2012

இரட்டை வாழ்க்கை


காலம் எவ்வளவு கொடுமையானது
காதல் கொடுமையின் கொடுமை
மணமாகி மகனாகியும்
மறக்க முடியவில்லைதான் உன்னை
மன்னவனிடமும் கூறவில்லை
கூறினால் குறைதான் வாழ்வு
உன்னுடன் வாழ்ந்த
அந்த பசுமையான நாட்கள்
என்னுள் பச்சை பசேலாய்
உன்னை நான்
நினைக்காமல் இருக்கத்தான் பார்க்கின்றேன்
தோற்றுத்தான் போகின்றேன்
நினைவெல்லாம் நீயாகிப்போனதால்
உன் முதல் மாத சம்பளத்தில்
உனக்குள்ளிருந்த எனக்கு நீ அளித்த
அந்த மோதிரம் மட்டும் இன்னுமென் விரலில்...
நினைவில் நீ
நிசத்தில் அவன்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நான்...